மிக மோசமான நிலையில், தமிழ் சினிமா – நடிகர் விஷால்

விஷால் நடித்த “வீரமே வாகை சூடும்’’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து இருக்கிறார். து.ப.சரவணன் இயக்கியிருக்கிறார். படம் திரைக்கு வருவதையொட்டி நிருபர்களுக்கு விஷால் பேட்டி அளித்தார்.

‘‘இது அதிரடியான படம்தான். மிரட்டலான சண்டை காட்சிகளுடன், ‘சென்டிமென்ட் சீன்’களும் உள்ளன. ஒரு கருத்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. படம் தியேட்டர்களில்தான் திரையிடப்படும்.

இந்த படத்தில் நான் போலீஸ் வேலைக்கு போவதற்காக காத்திருக்கும் இளைஞராக நடித்து இருக்கிறேன். ‘பாண்டிய நாடு’ படத்தில் வந்தது போல் ஒரு கதாபாத்திரம். மலையாள படஉலகில் பிரபல நடிகராக இருக்கும் பாபுராஜ் வில்லனாக நடித்து இருக்கிறார்.

நடிகர் சங்க பிரச்சினைகள் இன்னும் 4 மாதங்களில் சரியாகிவிடும். இறுதிக்கட்ட பணிகளுக்காக இன்னொரு நட்சத்திர கலை விழா நடத்த வேண்டியிருக்கும்.

சமீபகாலமாக எப்போதாவது ஒரு படம்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் பட உலகம், மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதில் இருந்து சினிமாவை மீட்டெடுக்க வேண்டும். அதற்காக சினிமா தொடர்பான எல்லா வேலைகளையும் 2 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும். அதன்பிறகு கூடிப்பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும்.’’

Related posts