பொங்கல் கொண்டாடிய சூர்யா, சிவகார்த்திக்கேயன்…!

தமிழர் திருநாளான பொங்கல் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் அதிகாலையில் தங்கள் வீட்டின் முன்பு 3 கற்களால் அடுப்பு அமைத்து, புது நெல்லை கொண்டு ஆக்கிய புத்தரிசியை புது பானையில் இட்டு, வெல்லம் சங்கமிக்க, பொங்கல் பொங்கிவர, புத்தாடை அணிந்து சுற்றி நிற்கும் குடும்பத்தினரும், சுற்றத்தினரும் பொங்கலோ… பொங்கல்… என்று குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாடினர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் சகோதரர் கார்த்திக்குடன் இணைந்து வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நெஞ்சார்ந்த தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மகன் குகன் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

அதில் சிவகார்த்திக்கேயனும், அவருடைய மகனும், பச்சை நிறத்தில் ஒரே மாதிரியாக வேஷ்டி, சட்டை அணிந்துள்ளனர். மகள் ஆராதனா, நீல நிற ஆடையிலும், மனைவி ஆர்த்தி பட்டுப்புடவையிலும் இருந்தார்.

Related posts