பிரியந்த குமாரவின் சடலம் இலங்கையை வந்தடைந்தது

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 186 என்ற விமானத்தின் ஊடாக எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த விமானம் லாஹூரில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.
அதனடிப்படையில் குறித்த விமானம் மாலை 5.10 மணி அளவில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts