வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட ‘கனோஜி’ கைது

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கனோஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 2019 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறூப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. இவர் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் கடை உரிமையாளர் ஒருவரை தலையில் அடித்து கொலை செய்த வழக்கில் பிரதான சந்தேக நபராவார், மேலும் இவருக்கு யாழ்.நீதிமன்றில் இரண்டு பிடியாணைகள் உள்ளதாகவும், வினோதன் வீடு, அகிலசுமன் வீடு ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பிரதான சூத்திரதாரி இவர் எனவும் கூறப்படுகிறது. சந்தேக நபரின் தாய் வெளிநாட்டில் இருப்தாகவும் அவரின் உதவியுடன் ஓரிரு மாதத்தில் இலங்கையை விட்டு தப்பிக்க இருந்த நிலையில், குறித்த நபர் மாறு வேடத்தில் அடையாளம் காண முடியாதவாறு தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய் சுதுமலையில் வைத்து இவருடன் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Related posts