இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரின் அறிக்கை

புதுடில்லிக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் “நியமனச்சான்று” குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஊடக அறிக்கைகள் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளவரின் “நியமனச்சான்றினை” இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related posts