விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்

கொரோனா விதிகளை கடைபிடிக்காததால் நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினருக்கு அபராதம்.
பழனியை அடுத்த காரமடை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு நேற்று காலை நடந்தது.
இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், படப்பிடிப்பை பார்வையிட மண்டபம் முன்பு திரண்டனர். இதனால் காலை முதலே அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, படப்பிடிப்பின்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசம் அணியவில்லை. அப்போது, அங்கு ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறையினர், படக்குழுவினருக்கு ரூ.1,500 அபராதம் விதித்தனர்.

Related posts