யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு

யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்

கொரோனா வைரஸ் தொற்று காலத்தின் பின்னர் தற்போதுள்ள புகையிரதசேவை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன. கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமையான புகையிரத சேவைகள் இடம் பெற்று வருகின்றன.

கடந்த நாட்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள நகர் சேர் கடுகதி புகையிரத சேவை எதிர்வரும் 29 ,30 ,31 மற்றும் 1 ஆம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த சேவையானது எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரத நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என யாழ்ப்பாண பிரதான புகையிரத அதிபர் மேலும் தெரிவித்தார்.

-யாழ். நிருபர் சுமித்தி-

——–

கொரோனா தொற்று காரணமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு வருமானம் ஈட்ட வழிமுறைகளை ஏற்படுத்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொரள்ள பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திகப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக 4 இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் அவர்கள் அனைவருக்கும் புதிதாக வேலைவாய்ப்பை வழங்குவது எமது கடமையாக இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts