வீடு திரும்பினார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன்
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள்.

நேற்று அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் செய்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் இன்று பிற்பகல் நான் கொரோனா பரிசோதனையில் என தெரியவந்தது. இதை நான் வெல்வேன் என்று சொன்னேன். னக்கும் எனது குடும்பத்துக்கும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் எனது நன்றி. நன்றி என கூறி உள்ளார்.

Related posts