ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் ‘திரில்லர்’

ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிளு கிளுப்பு திரைப்படம் ’திரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணி எனவும் அறிமுகம் செய்துள்ளார்.

கொரானோ ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். இருந்தாலும், இயக்குனர் ராம்கோபால் வர்மா இணையதளங்களில் படங்களை வெளியிடுவதில் மும்முரமாய் இருக்கிறார். அது, சாதாரணப் படங்கள் அல்ல ஆபாசப்படங்கள்.

இப்படியும் கூட ஒரு இயக்குனர், தயாரிப்பாளர் நினைத்தால் பணம் சம்பாதிக்க முடியும் என ‘கிளைமாக்ஸ், நேக்டு நங்கா நக்னம்’ (CLIMAX and NAKED) என இரண்டு படங்களை வெளியிட்டார். அடுத்து ‘திரில்லர்’ என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார் ராம்கோபால் வர்மா. இது குறித்து அவர் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எங்கள் அடுத்தப்படத்தின் கதாநாயகி இவர்தான். அப்சரா ராணி. இத்திரைப்படத்திற்கு திரில்லர் என பெயர் வைத்திருக்கிறோம். க்ளைமாக்ஸ், நேக்கட் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இத்திரைப்படம் உருவாகவுள்ளது” என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அப்சராவைச் சந்திப்பதற்கு முன்பு, 1999 ஒரிசாவில்சூறாவலை உருவாது பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்..ஆனால், இப்போது அபசராவை சந்தித்தபின், ஒரிசா அனைத்து வகையான சூறாவளிகளையும் உருவாக்குகிறது என்பதை உணர்ந்தேன்..ஒரிசாவில் இதுபோன்ற அழகானவர்கள் இருக்கிறார்கள் என்பது ஒரு பெரிய வெளிப்பாடாகும் என ராம்கோபால்வர்மா கூறி உள்ளார்.

Related posts