சென்னையில் 26 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று 2 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், நேற்று 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 66,538 ஆக உள்ளது.

சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னையில் இதுவரை 41,309 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குண்மடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 24,195 சிகிச்சை பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,033 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts