கொரோனா: தமிழக பாதிப்பில் 70 சதவீதம் சென்னையில்…

ஒரேநாளில் ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் 426 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், தேனாம்பேட்டையில் தொற்று பாதிப்பு 3000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட 1927 தொற்றுகளில், சென்னையில் 1404 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 சதவிகிதம் ஆகும்.

சென்னையில், ஒரே நாளில் நேரத்தில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 223 பேரும், தண்டையார்பேட்டையில் 213 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 213 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று மண்டலங்களில் ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக, தேனாம்பேட்டையில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.

அண்ணாநகரில் 184 பேரும், கோடம்பாக்கம் 149 பேரும், திரு.வி.க.நகரில் 105 பேரும், அடையாறு 70 பேரும், அம்பத்தூரில் 53 பேரும், மாதவரத்தில் 42 பேரும், திருவொற்றியூரில் 38 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஆலந்தூரில் 38 பேரும், சோழிங்கநல்லூரில் 34 பேரும், வளசரவாக்கத்தில் 34 பேரும், பெருங்குடியில் 31 பேரும், மணலியில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

Related posts