போராட்டங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் – ஒபாமா

போராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல்…

இலங்கையின் மூன்று முக்கிய செய்திகள்..!

நெலுவ பகுதியில் உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கரும் சிறுத்தை அல்ல எனத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர், நெலுவ பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்த வலையில் சிக்கி இச்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் அறிந்த குறித்த பகுதிக்குரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த இச்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. அண்மையில் இவ்வாறான 03 அரிய வகை சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். —– லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல்…