பாலியல் சீண்டல் லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்.

கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திரைப்பட நட்சத்திரங்கள் மனம் விட்டுப் பேசி வருகிறார்கள். அதுவும் தாங்கள்

சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்களை துணிச்சலுடன் கூறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகையும், இயக்குனருமான

லட்சுமி ராமகிருஷ்ணன், தானும், தன் மகளும் சந்தித்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் சிறிய வயதில் அப்பா ஸ்தானத்தில் இருந்த உறவினர் ஒருவர் அடிக்கடி என் முன்பு தனது

அந்தரங்க உறுப்பை காட்டியபடி நின்றார். ஆரம்பத்தில் அதன் அர்த்தம் என்ன வென்று தெரியவில்லை. வயது வந்த பிறகு அவர் செய்த

கொடுமையான செயல் மனதில் ரணமாக மாறியது. இத்தனை நாட்கள் இதை என் மனதின் இருட்டு அறையில் யாரும் அறியாமல்

மறைத்து வைத்திருந்தேன். இப்போது தான் வெளிப்படையாக கூறுகிறேன்.

இதேபோல் சமீபத்தில் என்னுடைய மகளுக்கு இப்படி ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது. அவள் பள்ளியில் இருந்து வீடு

திரும்பிய போது லிப்டில் ஒருவன் தன் பேண்ட்டை அவிழ்த்து காட்டியுள்ளான். பதறிப்போன என் மகள் அலறியபடி ஓடி வந்து இதை

தெரிவித்தார். அந்த நபர் யார் என நானும் முடிந்தவரை சிசிடிவி கேமராவின் உதவியோடு பார்த்தேன். ஆனால் யார் என்று என்னால்

கண்டுபிடிக்க முடியவில்லை, இப்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை யோசிப்பது தான் தீர்வு என்று கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

Related posts