மும்பையில் கொரோனா 2 ஆயிரத்தை தாண்டியது

மும்பையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் நாட்டிலேயே மராட்டியம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மராட்டியத்தில் 2919 ஆக உள்ளது. 187 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே மாநில தலைநகர் மும்பையில் மட்டும் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இதனால் இங்கு பாதிப்பு எண்ணிக்கை 2043 ஆக அதிகரித்து. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Related posts