சம்பளத்தை 6 கோடிகளாக்கிய நயன்.. கல்யாண ஆசை மரத்துவிட்ட சிம்பு..!

நயன்தாரா இதுவரை ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்தார். இப்போது தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தி விட்டார். இந்த சம்பளத்தை கொடுத்தால் நடிப்பது, கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.

வந்த வரை வரவு என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டதாக பேசப்படுகிறது. ‘‘இரவு-பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்தேன்….போதுமான அளவு சம்பாதித்தும் விட்டேன்.

இனிமேல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்’’ என்று நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம், நயன்தாரா!

——-

கல்யாண ஆசை மரத்துவிட்ட சிம்பு..!

சிம்புவுக்கு கல்யாண ஆசையே இல்லை என்கிறார்கள், அவருடைய நெருக்கமான நண்பர்கள்.

சிம்புவை எப்படியாவது திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து விடுவது என்று அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகிய இருவரும் முயற்சித்து வருகிறார்கள்.

அவர்களின் முயற்சி வெற்றி பெறுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்!

——–

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். நயன்தாரா வக்கீலாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் மகளாக கீர்த்தி சுரேஷ் வருகிறாராம்!

சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்!

——–

சைலன்ஸ்’ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி இருக்கிறது. ஹேமந்த் மதுக்கர் கதை எழுதி டைரக்டு செய்ய, டி.ஜி.விஷ்வபிரசாத், கோனா வெங்கட் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

படத்தை பற்றி ஹேமந்த் மதுக்கர் கூறியதாவது:-

‘‘அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்க்கையை கருவாக கொண்ட படம், இது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது? என்பதே படத்தின் கதை. வாய் பேச முடியாத-காது கேட்காத பெண்ணாக அனுஷ்கா நடித்து இருக்கிறார்.

இதுவரை பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்களுடன் திகில் மிகுந்த படமாக தயாராகி இருக்கிறது. மாதவன்-அனுஷ்கா ஜோடியுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும்.’’

Related posts