விஜய்க்கு வழக்கிலிருந்து விதிவிலக்கு வருமா ? யோகி பாபுவுக்கு தங்க சங்கிலி !

கடந்த வாரம் விஜய், சினிமா அன்புசெழியன் மற்றும் பிகில் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்ஆ கியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில்ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்கள், நகைகள்ப றிமுதல் செய்யப்பட்டன. ஆவணங்களின் அடிப்படையில் பைனான்சியர் அன்புசெழியன் 165 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது,

இந்த நிலையில் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோருக்கு வருமான வரித்துறை சார்பில்சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் கிடைத்த 3 நாட்களுக்குள் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி விளக்கம்
வேண்டும் என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று விஜய் மற்றும் அன்புசெழியனின் ஆடிட்டர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்அளித்ததுடன் தங்கள் தரப்பு ஆவணங்களையும் சமர்பித்தனர். வருமானவரித்துறை ஆஜராக விதித்த கடைசி நாள் இன்று. அதனால் இன்று கிறய், கல்பாத்தி எஸ்.அகோரம், அன்புசெழியன் ஆகியோர் நேரில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது. விஜய் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கும்படி கேட்டு நீதி மன்று செல்லலாம்
என்றும் தெரிய வருகிறது !

………

தற்போதைய நம்பர் ஒன் காமெடியனான யோகிபாபு விற்கும் அவரது உறவுக்கார பெண்ணான மஞ்சு பார்கவிக்கும் சமீபத்தில்திடீரென்று திருமணம் நடைபெற்றது. யோகிபாபுவின் குலதெய்வம் கோயிலில் நடந்த இந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெறகிறது.

இந்த நிலையில், யோகிபாபுவின் திரையுலக நண்பர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு தற்போது தனுசு டன் இணைந்து நடித்து வரும் கர்ணன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் யோகிபாபு. அப்போது அவரது கழுத்தில் தங்க செயின் அணிவித்து திருமண வாழ்த்து சொல்லியிருக்கிறார் தனுஷ். இந்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக்கி கொண்டிருக்கிறது

Related posts