பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்று தற்கொலை ?

டெல்லியில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை ஆய்வாளரை சுட்டுக் கொன்றுவிட்டு, ஆண் சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கிழக்கு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொழில்துறை பகுதி காவல் நிலையத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ப்ரீத்தி அகலாவத் ( வயது 26) நேற்று இரவு பணி முடிந்து, ரோஹினி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரை இன்னொரு சப்- இன்ஸ்பெக்டரான தீபான்சு ரதி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அரியானா மாநிலம் கர்னால் அருகே காரில் தீபான்சு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். தீபான்சு ரதி சோனிபட்டைச் சேர்ந்தவர், ரோஹினியில் ஒரு வாடகை விடுதியில் தங்கியிருந்தார்.

இருவரின் உடல்களையும் கைப்பற்றிய டெல்லி போலீசார் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபான்சு ப்ரீத்தியை ஒருதலையாக காதலித்து உள்ளார். தீபன்சுவை திருமணம் செய்து கொள்ள ப்ரீத்தி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Related posts