அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களும் இங்கு பெயரிடப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 05ஆம் திகதி இப்பெயர்கள் சபையில் அறிவிக்கப்படும். இந்தக் குழுக்களுக்கான தலைவர்களின் தெரிவு உறுப்பினர்களின் உறுதிப்படுத்தல்களுடன் மேற்கொள்ளப்படும்.

Related posts