மோகன்லால் படத்தில் ஜாக்கிசான், ரூ.400 கோடியில் தயாராகிறது..?

மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.

கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர்.

இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு நாயர் ஸான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடா மல்லி ஆகிய படங்களை இயக்கியவர். மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் நாயர் ஸான் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

மோகன்லால் அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது. ஜாக்கிசான் நடிப்பதால் படத்துக்கு உலக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. மோகன்லால் நடித்து திரைக்கு வந்த புலி முருகன், ஜனதா கேரேஜ் படங்களும் வெளிநாடுகளில் நல்ல வசூல் பார்த்தன.

Related posts