யாழில் மர்மமாக உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று (22) காலை மீட்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில், இது கொலையாக இருக்கலாம் என அங்கிருந்தவா்கள் கூறியுள்ளனா்.

எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Related posts