சஜித்துக்கு கைநழுவும் தலைமைத்துவம் தலைவராகிறார் கரு ஜயசூரிய

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதம அதிகாரியாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக செயற்பட்டு வந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் குறித்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

——

பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

—–

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாசவை அந்நியப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.

கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு விட்டுக்கொடுக்க மறுப்பு தெரிவித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின.

இதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இவ்வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்குவதற்கான சம்மதத்தைப் பெற்றுக் ெகாண்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்க வருமாறு சஜித் பிரேமதாசவுக்குப் பல முறை அழைப்பு விடுத்திருந்தபோதிலும், அவர் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தேர்தல் தோல்வியோடு கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் பிரேமதாச, தலைவரைச் சந்திக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்திருக்கும் நிலையில் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால் மாத்திரமே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும் சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இந்தப் பின்னணியில், கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்கி, அவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயற்குழுவினரின் ஆதரவையும் பெற்றுக்ெகாண்டிருக்கிறார் என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, இடைக்கால தலைவராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்க இணக்கம் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏனைய நிர்வாகப் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின்படி, தற்போதைய தலைவர் பதவியை இராஜினாமா செய்தால் மட்டுமே புதிய தலைவர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். இல்லையேல், எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை ரணில் விக்கிரமசிங்கவே தலைவராகத் தொடர்வார்.

இதேநேரம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாயிருந்தால், இம்முறை பிரதமர் வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரிய களமிறங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவரிடம் கேட்டுக்ெகாள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் முரண்பாடுகள் இல்லாத நிலையில், கட்சியின் ஜனாநாயக சம்பிரதாயங்களின்படி தலைமைப் பதிவியை ஏற்றுக்ெகாள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார்.

கட்சியின் யாப்பு எவ்வாறிருப்பினும் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்பதற்கு சஜித் பிரேமதாச கைக்ெகாண்டுவரும் நடைமுறைகள் பற்றிக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப் பின்னணியிலேயே சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து அந்நியப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாகவிருந்தால் சஜித் அணியினர் தனிவழி செல்வது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Related posts