புதிய அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்

புதிய அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ் சேிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர் தரப்பில் அமர்ந்திருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதும் செயற்படுவோம் என எண்ண வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தவறான விடயங்களுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என தெரிவித்த அவர், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கபடும் சரியான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts