சகல பாடசாலைகளும் நாளை மூடல்

ஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, தேர்தல் தினமான எதிர்வரும் 16ஆம் திகதி மற்றும் அதற்கு மறுநாளான 17ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன.

நவம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் காரணமாக, வாக்களிப்பு நிலையங்களை அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் அதற்கு முன்தினமான வெள்ளிக்கிழமை (15) விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நவம்பர் 15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஒப்படைக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும் 16 ஆம் திகதியன்று வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பாடசாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேர்தல் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts