ஈக்காஸ்ற் திரையரங்கில் வரும் வெள்ளி 21.00 மணி சினம் கொள்

தற்போது தாயகத்தில் தயாரான சினம் கொள் திரைப்படம் பற்றியே எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது. கடந்த வாரம் நோர்வேயில் காண்பிக்கப்பட்டபோது 500 பேர்வரை பார்த்தாக தெரிவிக்கப்படுகிறது. இது நோர்வேயில் நடந்த சாதனையாகும். இப்போதும் நம்ப முடியவில்லை. ஆகவே கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

இப்படத்தை பார்க்கும் அரிய வாய்ப்பு இப்போது டென்மார்க் மக்களுக்கு கிடைத்துள்ளது. ஈக்காஸ்ற் திரையரங்கிற்கு வரும் வெள்ளி 15.11.2019 அன்று இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கிறது காட்சி. திரைப்பட இயக்குநர் ரஞ்சித்துடனும் நீங்கள் பேச முடியும். கனடாவில் இருந்து வந்துள்ளார்.

டென்மார்க் கலைஞர்களும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு.. இது போன்ற முயற்சிகளை பெரு மனதுடன் ஆதரிப்பது டென்மார்க் வாழ் மக்களின் தலையாய கடமையாகும்.

Related posts