வடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம்

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறா­வளி பிர­சா­ர­த்தில் ஈடு­ப­ட­வுள்ளார்.

இன்று வட பகு­திக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகு­தி­க­ளிலும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்ளார்.

இன்று காலை மன்­னாரில் இடம்­பெறும் பிர­சா­ரக்­கூட்­டத்தில் பங்­கேற்கும் சஜித் பிரே­ம­தாச அத­னை­ய­டுத்து கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார்.

நாளை சனிக்­கி­ழமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­ய­வுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அட்­டா­ளைச்­சேனை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் சஜித் பிரே­ம­தாச கலந்து கொள்­ள­வுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்­பெறும் பிர­சா­ர­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் மற்றும் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், பிர­தேச சபை­களின் தவி­சா­ளர்கள் என பலரும் கலந்து கொள்­ள­வுள்­னனர்.

அட்­டா­ளைச்­சே­னையில் நடை­பெ­ற­வுள்ள பிர­சார பொதுக்­கூட்டம் அஷ்ரப் ஞாப­கார்த்த பொது விளை­யாட்டு மைதா­னத்தில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டு­களை பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் , முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மத்திய குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பு ( கிட்டுப்பூங்கா ) வில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறும் மாபெரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் வெற்றிக் கூட்டத்தை தொடர்ந்து, தென்னிந்திய இசை கலைஞர்களான நிக்கல் மெத்தியு, அனிருத், சுகன்னியா, ஸ்ரீசா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சியொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts