டென்மார்க் கோசன்சில் வாழ்ந்த தமிழ் இளைஞர் பிரான்சில் நடந்த தாக்குதலில் பலி..!

டென்மார்க் கோசன்ஸ் நகரில் வசித்துவந்தவரும், இலங்கையில் யாழ். உடுவில் பகுதியை சேர்ந்தவருமான றொனால்டன் என்பவர் டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற வேளை தாக்குதலுக்கு இலக்காகி சுமார் ஒரு வாரம் கோமா நிலையில் இருந்து மரணித்துள்ளார்.

இவருக்கு வயது 33 இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் மனைவி நிறைமாத கர்ப்பிணி என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இவர் பாரீஸ் வில்நெப் சொன் ஜேர்ஜ் பகுதியில் வசித்து வந்த தனது பெரிய தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் பாரீஸ் சென்றிருந்ததார். அத்தருணமே இனம் தெரியாத நபர் அல்லது நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சம்பவம் இரவு நேரம் நடந்துள்ளது. சுமார் 3.00 மணி என்று செய்தி வெளியாகியுள்ளது. தலையில் தாக்குதலுக்குள்ளான இவர் ஒரு வாரம் கோமாவில் இருந்து சிகிச்சை பயனளிக்காது மரணித்துள்ளார்.

அதன் பின்னர் உடலம் டென்மார்க் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவரை தாக்கியவர் யார்..? அவர்களுடைய நோக்கம் என்ன..? பிரான்சிய போலீசாரால் சம்மந்தப்பட்டவரை கைது செய்ய முடியுமா..? என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

ஆனால் இவர் சிறந்த உதைபந்தாட்ட முன்னணி வீரர், இசைத்துறை நாட்டம் கொண்டவர் என பல்வேறு ஆற்றல்களும் இவருக்கு இருந்தது. அன்னாரின் இழப்பு பேரிழப்பு என்று அவருடைய நண்பர்கள் பலர் கூறுகிறார்கள்.

இந்த செய்தி புதியபூமி டொட் கொம் என்ற இணையத்தில் வெளியாகியுள்ளது. டென்மார்க் போலீசாரின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை கிடைக்கவில்லை.அது கிடைத்த பின்னரே சரியான தெளிவான விபரத்தை அறியலாம்.

அலைகள் 15.10.2019

Related posts