கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா நினைவேந்தலும் கௌரவிப்பும் தாயகத்தில்

டென்மார்க்கில் வாழ்ந்த அமரர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் கௌரவிப்பும் தாயகம் நீராவியடி, யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 20.10.2019 அன்று வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. பொன்மணி அறக்கட்டளை சார்பில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. டென்மார்க்கில் நடைபெற்ற பொன்னண்ணாவின் முதலாவது கவிதை நூல் வெளியீட்டுக்கு தலைமை தாங்கிய திரு. எஸ்.எஸ் குகநாதன் முதல் அவர் கடைசியாக நடாத்திய சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் 10 வது ஆண்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து பேசிய திரு. சுங்கர நாராயணன் வரை பலர் பங்கேற்க இருக்கின்றனர். இத்தகைய ஒரு சிறந்த முயற்சியை கவிஞர் அமரர் வேலணையூர் பொன்னண்ணா குடும்பத்தினர் முன்னெடுப்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

அலைகள் 15.10.2019

Related posts