சுபவேளை பார்த்து வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபக ராஜபக்ஷ இன்று (06) காலை தனக்கான வேட்புமனு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார்.

ஏற்கனவே பார்க்கப்பட்ட சுப வேளையான முற்பகல் 9.46 மணிக்கு மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு, ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் கட்டுப்பணம் செலுத்திய, கோட்டாபயவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்‌ஷவும் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (07) மு.ப. 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts