உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தனது ஆற்றலையும், அர்பணிப்புகளையும் மற்றும் பலத்தையும் முழுவதுமாக நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு செழிப்பான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க தான் முற்றுமுழுதாக தன்னை அர்பணிப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரேரித்ததுடன் அதற்கு மாநாட்டில் இருந்தவர்கள் ஏகமனதாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

Related posts