நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்!

1. கிராம மட்டத்தில் சேதன விவசாய மதிப்பீட்டு செய்கை செயலி தொடர்பான அபிவிருத்தி திட்டத்திற்கான பொது வசதிகளை மேம்படுத்துதல் – சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்களிப்புத் திட்டம் (SAPP)

இலங்கை அரசாங்கம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) மற்றும் தனியார் துறை பங்களிப்பு நிதி நிறுவனம் மற்றும் பயனாளிகளின் ஒன்றிணைந்த 105 அமெரிக்க டொலர் முதலீட்டின் மூலம் அரச தனியார் மற்றும் உற்பத்தி பங்களிப்பு (4P) மூலம் மேற்கொள்ளப்படும் சேதன விவசாய மதிப்பீடு ஊடாக விவசாயிகளுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்களிப்பு திட்டம் (SAPP) நடைமுறைப்படுத்தப்படும். இந்த சேதன விவசாய மதிப்பீட்டு செய்கை மதிப்பீட்டு அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தல், இதற்கமைவாக விவசாயிகளின் வருமான நிலையை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தக சந்தை பாதிப்பை குறைப்பதற்கான தேவையென அடையாளங் காணப்பட்ட விவசாய பண்ணைகளுக்கு அப்பால் அமைந்துள்ள சிறிய அளவிலான பொதுவசதிகள் அபிவிருத்திக்காக அதன் திட்டங்களில் இடப்பட்டுள்ள விவசாயிகளின் உற்பத்தி குழு – அமைப்புக்களின் தொடர் அபிவிருத்தி திட்டமொன்றிற்காக ஆகக் கூடிய வகையில் 5பில்லியன் ரூபாவிற்கு உட்பட்ட வகையில் பொருட்கள் அல்லது உதவித் தொகையை சிறிய அளவிலான விவசாய பங்களிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு விவசாய விடயதான பொறுப்பு அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுத்துவதை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

2. யாழ் மாவட்டத்தில் காணி அற்ற நீண்டகாலமாக உள்ளகப் பகுதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்குதல்

யாழ் மாவட்டத்தில் நீண்டகாலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த மற்றும் காணி அற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 535 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு நன்கொடையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு நன்கொடை என்ற ரீதியில் வழங்கப்பட்டுள்ள 7.5 ஏக்கர் அளவிலான காணியைக் கொண்ட யாழ் பிரதேச செயலாளர் பிரிவில் இல 88 கிராம உத்தியோகத்தர் பிரிவில் புதிவ மூவர் வீதி வண்ணார்பண்ணையில் அமைந்துள்ள இராசாலி குளன்கரை என்ற தனியார் காணியில் (Twin) இரட்டை மாடி வீடமைப்பு கட்டிடத் தொகுதியொன்று ஒரு வீடு 600 அடி சுற்றளவைக் கொண்டளவில் 250 வீட்டலகுகளைக் கொண்டதாக நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. காணி (உரிமையை வரையறுத்தல் ) (திருத்தம்) திருத்த சட்ட மூலம்

இலங்கையில் காணியை கொள்வனவு செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை ஒழுங்கு பங்குபரிமாறல் பட்டியல் இடப்பட்ட நிறுவனம் பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதற்கு தேவையான சட்டங்களை உள்ளடக்கிய 2014ஆம் ஆண்டு இல 38 கீழான காணி (உரிமையை வரையறுத்தல்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட வரைவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்காகவும் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 2006 இல 1 இன் கீழான அரசாங்கத்தின் வருமானத்தை பாதுகாக்கும் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் 3ஆவது சரத்திற்கான உத்தேச திருத்தம்

2006 இல 1 இன் கீழான அரசாங்கத்தின் வருமானத்தை பாதுகாக்கும் ( விசேட ஒழுங்குவிதிகள் சட்டத்தின்) 3ஆவது சரத்திற்கு அமைவாக ‘இறக்குமதி (ஏற்றுமதி) நேரம்’ என்றிருக்க வேண்டிய இடத்தில் சுங்க பதிவு வழங்கப்பட்ட தினமாக இருந்த போதிலும் சுங்க கட்டளைச் சட்டத்தின் 16ஆவது சரத்திற்கு அமைவாக இறக்குமதி நேரம் சம்பந்தப்பட்ட பொருள் இறக்குமதி செய்யப்படும் கப்பல் உண்மையில்; துறைமுக எல்லைப் பகுதிக்குள் வந்த நேரம் (ஏற்றுமதி நேரம் என்பது கப்பலில் சம்பந்தப்பட்ட சரக்கு ஏற்றப்பட்ட நேரம்) என்றிருக்க வேண்டும். ஆனால் இதில் குழப்ப நிலை ஏற்பட்டள்ளது. அதனால் இதனால் சம்பந்தப்பட்ட இரண்டு சட்டங்களுக்கு இடையில் நெருக்கத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் 2006 இல 1இன் கீழான அரசாங்கத்தின் வருமானத்தை பாதுகாக்கும் (விசேட ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் 3ஆவது சரத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. தொற்றா நோயான சிறுநீரக நோயினாலும் அடையாளங் காணப்படாத தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயினால் அவதியுறும் நோயாளர்களுக்கான குருதி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் மேம்படுத்தல்

தொற்றா சிறுநீரக நோயாளர்களுக்கான புதிய குருதி சுத்திகரிப்பு 33 மத்திய நிலையங்களினால் விநியோகித்தல், குருதி சுத்திகரிப்பு 50 மத்திய நிலையங்களை ஆகக் கூடிய வசதிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தல் உள்ளிட்டவகையில் நாடுமுழுவதிலும் உள்ள 643 இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்குவதற்காக Hospinorm Projects GmbH Frankfurter Str.92, Eschborn என்ற நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்ட ஆலோசனையை பாராட்டி சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக தொழில்நுட்ப பாராட்டுக்குழுவொன்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவொன்றையும் அமைப்பதற்கும் இந்த திட்டத்திற்காக தேவையான மானியத்தை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. புதிய பிரதேச செயலாளர் பிரிவை நிறுவுதல் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவை வர்த்தமானியில் உள்ளடக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவை நிறுவுதல் மற்றும் சீர்ப்படுத்துவதற்கான சிபாரிசுக் குழுவொன்றை நியமித்தல்

புதிய பிரதேச செயலாளர் பிரிவை நிறுவுதல், தற்போது அமைக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவை வர்த்தமானியில் உள்ளடக்குதல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவை நிறுவுதல் மற்றும் சீரப்;படுத்துவதற்கான எல்லை வரையறைக் குழுவொன்றை 5 வருடத்திற்கு ஒரு முறை நியமிக்க வேண்டும். இதற்கமைவாக ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் ஒருவரின் தலைமையின் கீழ் மேலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட புதிய எல்லை நிர்ணய குழுவொன்றை அமைப்பதற்காக உள்ளக மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. இராஜகிரிய புத்கமுவ வீதியில் அமைந்துள்ள காணியொன்றை வரையறுக்கப்பட்ட பெலி இன்வெஸ்ட்மன் லங்கா (தனியார் ) நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குதல்

இராஜகிரிய புத்கமுவ வீதியில் பாராளுமன்ற வீதிக்கு எதிரில் அமைந்துள்ள 2 ஏக்கர் 3 ரூட் காணியின் ஒரு பகுதியை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகை சபையின் சிபாரிசுக்கமைய கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக M/s Baili Investment Lanka (Pvt) Ltd. என்ற நிறுவனத்திற்கு 99 வருட கால எல்லைக்கு குத்தகைக்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இடர் அனர்த்தத்தை கொண்ட வலயங்களில் வாழும் பொதுமக்களுக்கு அனர்த்த நிவாரண வீடுகளை நிர்மாணித்தல்

இடர் அனர்த்த வலயங்களில் வாழும் பொதுமக்களுக்காக இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய அனர்த்த நிவாரண வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 400 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதுவரையில் பதுளை மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய 500 குடும்பங்கள் மற்றும் பதுளை மாவட்ட எல்லைக்கு அருகாமையில் மொனராகலை மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய 50 குடும்பங்களுக்காக காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கமைவான திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டாவது குழுவின் கீழ் இந்த 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டு பதுளை , மொனராகலை மாவட்டத்தில் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கையில் உள்ள தொல்பொருள் பொக்கிஷங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டளைகளை நடைமுறைப்படுத்;தல்

இலங்கையில் உள்ள தொல்பொருள் பொக்கிஷங்கள் மற்றும் இலங்கைக்குள் உள்ள வரலாற்று அல்லது தொல்பொருளியல் முக்கியத்துவம் உள்ள இடங்கள் மற்றும் கட்டிடங்களை மிகவும் சிறப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக 1940ஆம் ஆண்டு இல 9இன் கீழான தொல்பொருள் கட்டளைச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 47ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 1940ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இல 8698 என்ற வர்த்தமானியில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவு தற்பொழுது பொருத்தமான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேண்டும். இதனால் 1940ஆம் ஆண்டு இல 9 இன் கீழான தொல்பொருள் கட்டளைச்சட்டத்தின் 47ஆவது சரத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளில் திருத்தத்தை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தில் சமர்பிப்பித்து அதற்கான அனுமதியை அதனைத் தொடர்ந்து அந்த உத்தரவை வர்த்தமானியில் வெளியிடுவதறகும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு உள்ளக விமான சேவை உரிமையை வழங்குதல்

இலங்கையினால் வேறொரு அரசாங்கத்துடன் பேச்சுவார்ததை நடத்தப்பட்டுள்ள விமான சேவை உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் உள்ளக விமான சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பு அரசாங்கங்களின் விமான சேவை நிறுவனங்களுக்கு இதுவரையில் வழங்கப்படாத இருப்பினும் தேசிய விமான சேவை துறையை புனரமைக்கும் நோக்கத்துடன் உள்ளக விமான சேவை உரிமையுடன் இலங்கை உள்ளக விமான நிலையம் (மட்டகளப்பு சர்வதேச விமான நிலையம,; யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம,; கொழும்பு சர்வதேச விமான நிலையம,; இரத்மலானை மற்றும் மத்தள ராஜபக்ஷ விமான நிலையம்) களுக்கிடையில் விமான சேவைகளை முன்னெடுப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விமான சேவை நிறுவனங்களுக்கான அரசாங்கங்களுக்கிடையில் நிலவும் விமான சேவை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள செல்லுபடியான கால எல்லை ஒரு வருடமான தற்காலிக நடவடிக்கை அனுமதி பத்திரம் ஒன்றின் கீழ் மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச விமான நிலையங்களுக்கு மாத்திரம் வணிக விமான சேவைகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்தும் விமான சேவைகளுக்கு உள்ளக விமான சேவை உரிமையை வழங்குவதற்காக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையிடம் அதற்கான அதிகாரத்தை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்; அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியை செப்பனிடுதல்

கொழும்பு மாவட்டத்தில் புதுக்கடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதி சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்த தொல்பொருளியல் பெறுமதியைக் கொண்ட கட்டிடத் தொகுதியாகும். இதில் 7 நீதவான்; நீதிமன்றங்கள,; 9 மாவட்ட நீதிமன்றங்கள்,7 மேல் நீதிமன்றங்கள், 3 வர்த்தக நீதிமன்றங்களைப் போன்று இந்த நீதிமன்றங்களுக்கு அலுவலகங்களும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பல வருடங்களாக செப்பனிடும் நடவடிக்கைகள் போதுமான வகையில் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பழமைவாய்ந்த கட்டிடமொன்றை அமைத்து அதற்குள் கடடி;ட பணிகளின் கீழ் நீதிமன்றங்களை நிறுவி செப்பனிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதற்குத் தேவையான மதிப்பீட்டு மானியத்தை நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சிற்கு வருடாந்தம் மானியமாக ஒதுக்கீடு செய்வதற்கும் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிலையான தொழில்நுட்ப குழுவின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் நிர்மாணித்து செப்பனிடும் அடிப்படையில் இந்த புதுப்பிக்கும் வேலைகள், பொறியியலாளர் பணி தொடர்பில் மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் வழங்குவதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அலுவல்கள் அமைச்சர்; அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல்களுக்கு உள்ளாகியவர்களிடமிருந்து பணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒருங்கிணைப்பு சிறப்புப் பணிப்பிரிவு

திட்டமிட்ட குற்றச்செயல்களை மேற்கொள்ளுதல், நிதி தூய்மையாக்குதல் ,பயங்கரவாதத்திற்கு நிதியத்தை அமைத்தல் போன்றவற்றை புரந்தள்ளுதல், அவற்றைக் கட்டுப்படுத்துதல் ,அவ்வாறு இல்லையாயின் கட்டுப்படுத்துதல் தொடர்பில் முக்கிய தடையாகவுள்ள விடயங்களில் சட்டத்தை வலுப்படுத்தல் நிறுவனங்களுக்கிடையில் முழுமையான தொடர்பில்லாமை என்பது அனைத்து பிரிதிநிதிகளினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் நடவடிக்கை மட்டத்தில் செயற்பாடுகளுடனான பயன்களுடனான இணைப்பு பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் பணிப்பாளரின் தலைமையிலும் மேலும் 10 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டவிரோதமாக ஈட்டப்பட்டுள்ள சொத்துக்களை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஒருங்கிணைப்பு சிறப்புப் பணிப்பிரிவொன்றை அமைப்பதற்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. விளையாட்டுடன் சம்பந்தப்பட்ட தவறுகளை தடுக்கும் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்தற்காக அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக் கொள்ளுதல்

விளையாட்டுக்களுடன் தொடர்புபட்ட தவறுகளை தடுக்கும் திருத்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னைய கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கிய திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இராணுவத்திடம் வரட்சி புதர்காட்டு பங்கீட்டு பொதிகளைக் கொள்வனவு செய்தல் – விநியோகித்தல் வருடம் 2019

2019 ஆம் ஆண்டுக்காக இராணுவத்திடம் 200 000 வரட்சி புதர்காட்டு பங்கீட்டு பொதிகளை கொள்வனவு செய்வதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய இதற்காக ஆகக்குறைந்த ஆர்வ வெளிப்பாடு சமர்ப்பித்த ரொடொசா என்டபிரைஸ் (தனியார்) நிறுவனத்திற்கு 175 704 347.83 ரூபாவை வற் வரி அற்ற கொள்வனவிற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 2019 நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 02 வருட ஒப்பந்த காலத்திற்காக ஸ்ரீலங்கா விமான சேவையின் விமானத்துக்கு ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமானநிலையத்தின் மூலம் உணவு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 02 வருட ஒப்பந்த காலத்திற்காக ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திலிலிருந்து புறப்படும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் 520 விமான சேவைக்காக தேவையான உணவு மற்றும் பான வகைகளை விநியோகிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய ஜப்பான் யென் 307 695 073 பெறுமதிக்கு F M/s Gate Governnrent Japan Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. 180 000 ரெபிஸ்ட் வெக்ஸின்களை விநியோகிப்பதற்கான பெறுகை

விசர் நாய்கடி நோயைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் தடுப்பூசியான ரெபிஸ்ட் வெக்ஸின்களை (மனித பாவனை) (0.5 மி.லீ – 1 மி.லீ ) 180 000 மருந்து குப்பிகளை விநியோகிப்பதற்கான பெறுகை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபாரிசுக்கமைய M/s ABC pharma services (pvt) Ltd என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. மசகு எண்ணெய் வள அபிவிருத்தி செயலகம் கொண்டுள்ள கனிய வள எரிபொருள் தரவு விலை நிர்ணயம் – மீள்விலை மதிப்பீடு செய்தல்

எதிர்கால அனுமதி பத்திர சுற்றில் தங்கியிருப்பதற்காக மசகு எண்ணெய் வள அபிவிருத்தி செயலாளர் அலுவலகத்தினால் மன்னார் கடல் M 2 காணி தொகுதியில் புதிதாக பெற்றுக் கொள்ளப்பட்ட எரிபொருள் தரவுகளில் விலை உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளதுடன் மன்னார் ,காவேரி மற்றும் இலங்கை கடல் பகுதிகளிலுள்ள பழமை வாய்ந்த தரவுகளை மீண்டும் மதிப்பிட வேண்டியுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய கனிய வள அபிவிருத்தி செயலகம் கொண்டுள்ள தரவு விலை ஒழுங்குறுத்தல் மற்றும் மீள் பெறுமதியை ஒழுங்குறுத்தலுக்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பின் பிரதான மசகு எண்ணெய் சுத்திரிப்பு கோபுரம் டீசலுக்கான ஐட்ரஜன் உலைகள் மற்றும் வினையூக்க பொருட்களின் மீட்பை தொடர்ந்து மீட்டெடுப்புடன் பெற்றோல் ஒட்சிசன் மதிப்பை மேற்கொண்டு மாற்றுதல்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பிரதான மசகு எண்ணெய் சுத்திகரிப்பு கோபுரம் டீசலுக்கான ஐட்ரஜன் உலைகள் மற்றும் வினையூக்க பொருட்களின் மீட்பை தொடர்ந்து மீட்டெடுப்புடன் பெற்றோல் ஒட்சிசன் மதிப்பை மேற்கொண்டு மாற்றும் திட்டத்தின் முக்கிய கட்டமாக அடிப்படை பொறியியலாளர் திட்டத்தை தயாரிக்கும் ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட சிபாரிசுக்கமைய M/s Honeywell UOP LLC, USA என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

19. இடைக்கால கணக்கு அறிக்கை 2020

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16அம் திகதி அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதனாலும் 2019-08-03 திகதி அன்று அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் வகையில் 2020 ஜனவரி மாதம் 20ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கததின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான மானியத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கின் பிரிதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கை

அரசாங்கத் துறையி;ல் தற்பொழுது நடத்தப்பட்டு வரும் தொழில்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக 2019. 09.27 அன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை துணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரிகளின் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கான சேவை காலத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட ரூபா 3500 – 15000 இற்கு இடைப்பட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கான கொடுப்பனவு சேவைக்காலத்தை கவனத்தில் கொள்ளாது ரூபா 15.000 ஆக திருத்தத்தை மேற்கொண்டு செலுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சேவைக்காக நியாயமான சம்பள அளவை (Salary level) வழங்குவதற்காக ஆசிரிய சேவையை (Closed service) மூடிய சேவையாக அமைப்பதற்கும் பொருத்தமான சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ரயில் சேவையை (Closed service)மூடிய சேவையாக அமைப்பதற்கும் பொருத்தமான சம்பள கட்டமைப்பை மேற்கொள்வதற்காக இதன் அமைச்சரவை குழு சமர்ப்பித்த சிபாரிசுகள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Related posts