கடவுள் சொன்னதால் தான் என் மகளை ஆற்றில் வீசினேன்

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்ககு வயது 35. இவரின் மனைவி ஜூனுக்கு வயது 30. இவர்களுக்கு ரிஷிகா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற தந்தையான பீர்பால், சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்தார். அப்போது, அவரின் மனைவி, குழந்தை எங்கே? என்று கேட்டபோது, அருகில் ஓடும் ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு, அதிர்ச்சி அடைந்த மனைவி ஜூனு உறவினர்களிடம் கூற, அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஆற்றில் தேடினர். கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தேடி, குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்

இந்நிலையில், பொலிசார் பீர்பாலை கைது செய்து விசாரித்தபோது, தனது கனவில் கடவுள் வந்ததாகவும், கடவுளே இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால், பிறகு பில்லி சூனியத்தை நம்பினார் என்றும் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அவர் மனநிலை சரியில்லாதவர் போல இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், மந்திரவாதியின் தூண்டுதலால் இதை செய்தாரா? என்பது பற்றி விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம், , அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts