கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி ஶ்ரீதேவி ரயில்

கொழும்பில் இருந்து வவுனியா வரை பயணித்த கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில், இன்று (05) முதல் காங்கேசந்துறைவரை “ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு,கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணிக்குவந்தடைந்து,காங்கேசந்துறைக்குஇரவு 10.16 மணிக்கு குறித்த ரயில் சென்றடையும்.

பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அநுராதபுர புதிய நகரம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

குறித்த ரயிலானது காங்கேசந்துறையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்து,யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு முற்பகல்10.24 மணிக்கு சென்றடையவுள்ளது.

காங்கேசந்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், கிளிநொச்சி, அறிவியல் நகர், வவுனியா, மதவாச்சி, அநுராதபுரம்,அநுராதபுர புதிய நகரம், தம்புத்தேகம, கல்கமுவ, மாஹோ, குருநாகல், பொல்கஹவெல, மருதானை, கோட்டை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ் 13 பவர் ரயில் மூலம் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கான இரு புதிய ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த ஸ்ரீதேவி சேவையுடன் யாழ்ப்பாணத்திற்கான ரயில்கள்7 ஆக உயரும். வடபகுதி மக்களின் பயன்பாட்டினைப் பொறுத்தே நிரந்தர சேவைகளாக இவை அமையவுள்ளதாக தெரியவருகின்றது.

(வவுனியா விசேட நிருபர்– கே. வசந்தரூபன்)

Related posts