தாவடியில் புனரமைக்கப்பட்ட வீதி

துரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் தாவடியில் ஜே.192 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வீதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்ட சோப்ரா உப ஒழுங்கை எனும் இந்த வீதியை உடுவில் பிரதேச செயலர் நாடாவெட்டி திறந்து வைத்தார்

இவ் வீதியின் பெயர்ப்பலகையை வீதியை புனரமைக்க நிதியுதவி வழங்கிய சித்தார்த்தன் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் உடுவில் பிரதேச செய்லர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், சின்னமாகப் பிரதேச சபைத் தவிசாளர், யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts