சஜித் பொறுப்புணர்வுடன் கருத்துக்களை மேற்கொள்ள வேண்டும்

அமைச்சர் சஜித் பிரேதமதாச வௌியிடும் ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச ஒரு இடத்தில் கூறினார் பெண்கள் சமூகத்தை கோடீஸ்வரர்காக மாற்றுவேன் என்று. இந்நாட்டு ஆண்கள் பத்திரிக்கை வாசித்து வாசித்து இருக்க முடியும். ஜனாதிபதியானால் செய்வேன் என்று சொன்னார்.

இந்நாட்டில் 14 ஆயிரம் கிராமங்கள் உள்ளதாக கூறினார். அந்த 14 ஆயிரம் கிராமங்களுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொள்வதாக கூறினார். ஜனாதிபதி பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். 1825 நாட்கள். ஒரு கிராமத்துக்கு சென்றால் அங்கு சுமார் இரண்டு மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும்.

அவ்வாறான நிலையில், 24 மணித்தியாலங்களும் கிராமம் கிராமமாக சென்றாலும் 14 ஆயிரம் கிராமங்களுக்கும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் . இது பிரதேச சபை தேர்தல் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

Related posts