யாழில் ஒரே நாளில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்த ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு இன்று (30) யாழிற்கு வருகை தந்திருந்தார்.

விவசாயம் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சும் மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வில், விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்னான்டோ மற்றும் வடமாகாண ஆளுநார் சுரேன் ராகவன, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ், வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினையும் ஜனாதிபதி இன்று ஆரம்பித்து வைத்தார்.

6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நன்னீர் திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் என்ன கருத்து அமைவாக யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் முகமாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்ரீலங்கா கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், எம்.ஏ சுமந்திரன், மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் மற்றும் அரசு அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் தமக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதுடன் தமது விவரங்களை பதிவு செய்து நாட்டிலுள்ள சகல இடங்களுக்கும் தேவையான வேலைகளை விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன் யாழ்.கைதடியில் அமைக்கப்பட்ட வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியையும் ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.

Related posts