மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி

துறையூர் அருகே கிணற்றுக்குள் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகினர்.

திருச்சி அருகே துறையூர் அடுத்த எஸ்.எஸ் பூதூரில் மினி வேன் ஒன்றில் 22 பேர் பயணம் செய்தனர். கோயில் திருவிழாவிற்கு சென்ற போது திடீரென மினி வேனின் டயர் வெடித்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த 22 பேரில் குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவிற்கு சென்ற போது 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது
மினி வேன் விபத்திற்க்குள்ளானது.

Related posts