மாநாடு படத்தில் சிம்பு நீக்கம் வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து ‘மாநாடு’ படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு, மாநாடு படத்தில் எனது சகோதரருடன் வேலை செய்ய முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளர் அனுபவிக்கும் உணர்ச்சி மற்றும் பண அழுத்தத்தத்தை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர் எடுக்கும் முடிவை நான் மதிக்க வேண்டும். எல்லா அன்பிற்கும் நன்றி என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

Related posts