கம்போடியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்ரி

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி, பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கம்போடியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி, இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை, கம்போடியாவின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் Samdech Chaufea Veang Kong Som Ol உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அவர் தனது விஜயத்தின்போது, கம்போடிய மன்னர் Norodom Sihamoni சந்திக்கவுள்ளதோடு, கம்போடிய பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதோடு, இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதேவேளை, இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் ஜனாதிபதிகலந்துகொள்ளவுள்ளார்.

Related posts