தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை !

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை என்பன ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு நாளை மறுதினம் (31-07-2019) நள்ளிரவு முதல் தனியார் வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த வாரம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. அத்தோடு ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைகளை நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

இதன்பிரகாரம் மொத்தமாக 339,369 மாணவர்கள் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக தோற்றவுள்ளனர். மேலும் 2995 பரீட்சை நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளது என்றார்.

Related posts