இன்று மாலை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்போம்

ரிஷாத் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கிம் உள்ளிட்ட பதவி விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை 7 மணியளவில் மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார்.

கல்முனை விவகாரத்தை மையப்படுத்தி உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts