த.தே.கூவின் சாணக்கியம் இனப்படுகொலையே..!


srilanka :
நேற்று காலை முதல் இன்று காலை வரை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 235 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் நாடு முழுவதும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் மதுபானம் அருந்தி வாகனம் செலுத்திய நிலையில் புதிய சட்டத்தின் கீழ் 5497 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

—–

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் அனைத்தும் இனப்படுகொலையே என் பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கபட்டிருந்தது.

இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தை சென்றடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் யாவும் இனப்படுகொலையே என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை ஏந்தியிருந்ததுடன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts