வாள் வெட்டுக் குழு உறுப்பினருடன் தொடர்புடைய இருவர் கைது

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வாள் வெட்டுக் குழு உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று (24) காலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்ளவதற்காக சென்ற கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த வாள்வெட்டு குழுவினர் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதான செ. குவிகஜன் உயிரிழந்தார்.

சம்பவத்தின் பின்னர், மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே, இன்று குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 19 வயது முதல் 23 வயது வரையான இளைஞர்களே கைது செய்யப்பட்டவர்கள் என்றும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts