2021 ஆம் ஆண்டு முதல் பாடப்புத்தகங்களில் மாற்றம்

மாணவர்களின், புத்தக பையின் எடையை குறைப்பதற்காக பாடப்புத்தகங்கள் 3 தவணைகளின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் பாடப்புத்தகங்கள் மூன்று மாத்திரம் அச்சிடப்படவுள்ளது. இந்த பாடப்புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்வாங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் பாடப்புத்தக எடைகளின் சுமையை பெருமளவு குறைக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாடப்புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பக செலவு, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Related posts