சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய பலாலி விமான நிலையம்

யாழ். பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

இத்தொகை சுற்றுலா தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொகை அரை பங்காகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை சிவில் விமான நிலையமாக கையாளுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிவில் விமானங்களை நடத்திவரும் அரசுக்கு சொந்தமான விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் பலாலி விமான நிலையம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய அபிவிருத்திக்காக 1050 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

இத்தொகையில் 900 மில்லியன் ரூபா இலங்கை சிவில் விமான அதிகாரசபை நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.

இந்த புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பெருந்தொகை வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய விமான நிலையமாக மட்டுமன்றி சர்வதேச விமானங்களை கையாளக்கூடிய நிலையமாக அதாவது தென்னிந்தியாவை உள்ள நகரங்களை உள்ளடக்கிய வகையில் விமான சேவைகளை மேற்கொள்ளக்கூடிய நிலையமாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நடுத்தர அளவிலான A320 மற்றும் B737 விமானங்களை கையாளக்கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

Related posts