தமிழரை மணப்பேன்….! அஞ்சலி

பிரச்னையை சந்திக்காத நடிகைகள் இல்லை. பாலியல் தொல்லை, சம்பள பிரச்னை, ஓரம்கட்டப்படும் பிரச்னை, குடும்ப பிரச்னை என வெவ்வேறு பிரச்னைகளை பல ஹீரோயின்கள் எதிர்கொண்டிருக்கின்றனர். நடிகை அஞ்சலியும் அதற்கு விதிவிலக்கல்ல. சில வருடங்களுக்கு முன் தனது சித்தியுடன் அஞ்சலிக்கு பிரச்னை ஏற்பட்டு கோர்ட் வரை சென்றார். நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் இன்றுவரை மீளவில்லை. பிரச்னைகள் ஒருபக்கமிருந்தாலும் நடிப்பை விட்டுவிலகாமலிருக்கிறார் அஞ்சலி.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய், அஞ்சலி இணைந்து நடித்ததுடன் மேலும் சில படங்களில் ஜோடி சேர்ந்தனர். இதையடுத்து இருவரும் காதல், லிவிங் டு கெதர் பாணியில் வாழ்கின்றனர் என கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது. ஒரு கட்டத்தில் இருவருமே இதை மறுத்தனர். ஆனாலும் புகைச்சல் அடங்கவில்லை.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் திருமணம்பற்றி அஞ்சலி புதுகுண்டு தூக்கிப்போட்டிருக்கிறார். ‘என்னுடன் நடித்த பல ஹீரோக்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஜெய் மட்டும்தான் இன்னும் திருமணம் ஆகாமலிருக்கிறார். நான் எப்போது திருமணம் செய்துகொள்வேன் என்று எனக்கு தெரியாது.

அப்படி திருமணம் செய்தால் ஒரு தமிழரைத்தான் திருமணம் செய்வேன்’ என்றார். அஞ்சலியின் இந்த பதிலையடுத்து ரசிகர்கள், நீங்கள் தேர்வு செய்யப்போகும் தமிழன் ஜெய்தானா? என கேட்டு வருகின்றனர். அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் சைலன்ஸ் ஆக இருக்கிறார் அஞ்சலி. தற்போது அவர் நடித்து வரும் படத்தின் பெயரும் சைலன்ஸ் என அவரது மவுனத்துடன் ஒத்துப்போயிருக்கிறது.

Tags:

Related posts