மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, அடுத்த வாரம் தமது குழு சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறினார்.

ஏற்பட்ட அசாதாரண நிலமை காரணமாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் தத்தமது பதவிகளை இராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

Related posts