டெப்பாசிட் இழந்த கமலுக்கும் அழைப்பு : பதவியேற்பு விழா


கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி மக்களின் காதில் பூ சுற்றி வருகிறார். டெப்பாசிட் இழந்த கதையை பேசாது வெற்றி போல பேசி வருகிறார். கமல் படுதோல்வி என்பதே உண்மை.

ஆனால் இந்திய ஊடகங்களும் இணைந்து பூசி மெழுகி வருகின்றன.. அதற்கு உதாரணமாக இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts