இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 24.05.2019 வெள்ளி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

——-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் 05 சந்தேகநபர்களை இன்று (24) கைதுசெய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவப்பொத்தான பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஹொரவப்பொத்தானயின் கிவுலேகட பிரதேசத்தைச் ​சேர்ந்த ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றக் கூடியவர் என்று அவர் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஹொரவப்பொத்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

——–

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சுமார் 250 பேரைக் கொல்லப்பட்டனர்.

39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுமார் 1 வருடம் 2 மாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

——-

ஈஸ்டர் தினத்தில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை விட ஒக்டோபர் 26 அரசியல் சதித்திட்டத்தினால் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேஅமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய நிதியமைச்சர்;

நாடு சர்வதேச ரீதியாக புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நாம் அதிகாரத்துக்கு வந்தோம். அதன் பின்னர் அரசாங்கம் மேற்கொண்ட ஜனநாயக செயற்பாடுகள் காரணமாக சர்வதேச நாடுகள் எமது தாய் நாட்டின் மீது நம்பிக்கை கொண்டு உதவ முன்வந்தன. இதனால் எமது நாட்டையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது.

நாம் மீளக் கட்டி எழுப்பிய நாட்டின் பொருளாதாரத்துக்கு முதலாவது அடியாக ஒக்டோபர் அரசியல் சதியிருந்தது. அந்த சட்டவிராேத ஆட்சி இடம்பெற்ற குறித்த 56நாட்களில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதா தர நிர்ணயத்தில் எமது நாடு பின்னடைவு கண்டது. எனினும் எமது சுயாதீன நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மீண்டும் எமக்கு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடிந்தது. இதனால் சர்வதேச நாடுகளால் எமது நீதித்துறைக்கு பெரும் கெளரவம் ஏற்பட்டது.

பின்னர் வீழ்ச்சுயுற்ற ரூபாவின் பெறுமதி குறிப்பிட்டளவு அதிகரிக்க ஆரம்பித்தது.

இவ்வாறானான நிலையிலே ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. ஒக்டோபர் அரசியல் சதித்திட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மரண அடிக்கு நிகரான தாக்குதலொன்றே இதுவாகும்.

பயங்கரவாத தாக்குதல் காரணமாக எமது நாட்டுக்கு அதிக அந்நியச்செலாவணியை பெற்றுத்தரும் சுற்றுலாத்துறை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை வர்த்தகத்தை கட்டியெழுப்ப நாம் பாரிய சலுகைகளை வழங்க தீர்மானித்திருக்கின்றோம். அதேபோன்று பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏனைய வர்த்தக நிலையங்களை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வெளிநாடுகளின் தூதரங்களால் விடுக்கப்பட்டிருந்த தடையை நீக்கி எமது நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம்அந்த நாடுகளின் தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது என்றார்.

Related posts