பிரமாண்ட படம்… நயனால் விலகிய சிம்பு

ஒரு காலத்தில் நயன்தாரா, சிம்பு தவிர்க்க முடியாத ஜோடியாக இருந்தது. நிஜத்திலும் காதல் ஜோடியாக வலம் வந்தவர்களுக்குள் திடீரென்று பிரேக் அப் ஆனது. பிரிந்த பிறகும் கூட இருவரும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு இருவருக்குமான விரிசல் நிரந்தரமானது. இதற்கிடையில் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாயினர். இந்த ஆண்டு இறுதியில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரமாண்ட படமொன்றிலிருந்து நயன்தாரா வால் சிம்பு விலகிய தகவல் கசிந்திருக்கிறது. சுமார் ரூ 800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார் மணிரத்னம். இதில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதே படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க மணிரத்னம் முயன்றார். அப்போது நயன்தாரா, ‘சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்’ என்று இயக்குனரிடம் கண்டிஷன் போட்டாராம். இந்த தகவல் மணிரத்னம் தரப்பிலிருந்து சிம்புவுக்கு தெரியவர, படத்திலிருந்து நான் விலகிக்கொள்கிறேன் என்று சிம்பு ஜென்ட்டிலாக விலகி விட்டாராம். பாகுபலி பாணியில் பொன்னியின் செல்வன் சரித்திர படம் 2 பாகங்களாக உருவாகவிருக்கிறதாம்.

Related posts