யாழில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு கண்டுபிடிப்பு

யாழ்.ஐந்து சந்தி பகுதியில் வீட்டினுள் தோண்டப்பட்ட கிணறு ஒன்றினை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கால பகுதியில் நாடு முழுவதும் தேடுதல் நடத்தப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்றைய தினம் ஞாயிறுக்கிழமை பெரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அப்பகுதியில் உள்ள வீடொன்றினை சோதனையிட்ட போது வீட்டினுள் நிலபதிப்பின் கீழ் (மார்பிள்) கிணறு ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.

வீட்டினுள் கிணறு தோண்டப்பட்டு அதன் மீது மார்பிள் பதித்து மறைத்து கிணற்றினை பயண்படுத்தி வந்துள்ளனர். குறித்த கிணறு தொடர்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இந்த தேடுதலில் போதே அதேப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் நிலக்கீழ் தளம் (Underground) கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts